Monday, 21 November 2011

உங்களுக்காக

ஓட்டமும்  நடையுமான என் பயணங்களில்
சிரத்தையின்றி நான் கேட்கும் உரையாடல்களில்
ஒரு சில வார்த்தைகள்
உங்களை நினைவுகூறும்
 என் நிகழ்காலம் நிறுத்த வைக்கும்
 நினைவுகள்  நோக்கி ஓட வைக்கும்
ஓயாமல் பெய்த மழை
ஒருவழியாய்  நிரப்பி சென்றது பள்ளங்களை
இன்னும் சிலரின் உள்ளங்களை.....
ஆம்....
புது மழை கழுவிச் சென்றது
என் புழுதி படிந்த நினைவுகளை
நிரம்பி வழிந்த  நினைவுகளால்
சலசலக்கும் சிலர் நெஞ்சம்
சத்தமில்லாத சில வார்த்தைகளோடு
இதோ என் சலசலப்பு........

No comments:

Post a Comment