Wednesday, 14 September 2011

என் சாலை ஓர மரங்கள்

நேற்று  நீ பார்த்து ரசித்து போன இலைகள்
உன் பிம்பம் பிரதிபலிக்கும் ,
         இன்று நான் நின்று ரசிக்கும்போது.
ஒவ்வொரு நாளும் புதுப்புது தளிர்கள் ,
        உன் பிம்பம் தாங்கும் கண்ணாடியாக ...
அழகாக்கும் நோக்கத்தில் அழிக்கபடுகிறது ஓர்நாள்
தளிரிழந்த தாய் இலைகளும் ,
தாங்கி  நின்ற வேர்களும் ,
வரவேற்கிறது என்னை வாட்டத்துடன்
நானும் வாடினேன்,
         தளிர் ஒன்றில் உன் கண்கள் இருந்த இடம் காணவில்லை ஆதலால் ...

No comments:

Post a Comment